Published : 01 Jul 2021 03:17 AM
Last Updated : 01 Jul 2021 03:17 AM
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) க.கோபிநாத் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டச் சான்றிதழ் பெற ஜூன் 30-ம் தேதிக்குள் (நேற்று) பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால், பட்டச்சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை, தேர்வு நெறியாளர் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கான கால அவகாசம் ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT