Published : 19 Jun 2021 03:15 AM
Last Updated : 19 Jun 2021 03:15 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு, 123 திருநங்கைகளுக்கு தலா ரூ.2,000, 10 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.
“திருநங்கைகள் நலவாரியம் விரைவில் அமைக்கப்படும். அதில், அனைத்து திருநங்கை களும் உறுப்பினர் களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார் அமைச்சர்.
காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண் ணபிரான் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT