Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM
தஞ்சாவூரில் நாயக்கர் கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.
தஞ்சாவூர் வடக்கு வீதியில் ஒரு கட்டிடத்தை சீரமைத்தபோது, புதையுண்டு கிடந்த ஒரு கல்வெட்டு கிடைத்தது. இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், தலைமையாசிரியர் கோ.தில்லைகோவிந்த ராஜன், ஆசிரியர் கோ.ஜெயலட்சுமி ஆகியோர் அங்கு சென்று, அக்கல்வெட்டை ஆய்வு செய்தனர்.
பின்னர், இதுகுறித்து அவர்கள் கூறியது:
மூன்றரை அடி உயரமும் ஒன்னேகால் அடி அகலமும் கொண்ட இந்தக் கல்வெட்டு தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்ததாகும். இதில் 15 வரிகள் செதுக்கப்பட்டுள் ளன. தஞ்சாவூரில் கி.பி 1535-ம் ஆண்டு முதல் கி.பி 1675-ம் ஆண்டு வரை 140 ஆண்டுகள் நாயக்கர் ஆட்சி நடைபெற்றது.
இவர்களுடைய ஆட்சிக்காலத் தில் பல புதிய கோயில்கள் கட்டுதல், பழுதடைந்த கோயில் களை சீரமைத்தல் மற்றும் அவற் றுக்கு அறக்கொடை வழங்குதல் போன்றவை செய்யப்பட்டன. அதன்படி, தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதிக்கு மேற்கே மேலவெளி ஊராட்சியில் சிங்கப்பெருமாள் குளம் எனும் இடத்தில் அமைந் திருந்த சிங்கப்பெருமாள் கோயி லுக்கு வழங்கிய கொடை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சீனிவாசபுரம் பகுதியில் இருந்துவந்த இக்கோயில் ஏதோ காரணத்தால் தஞ்சாவூர் நாயக்கர் காலத்தில் இடம்பெயர்க்கப்பட்டு, பள்ளியக்ரஹாரம் பகுதி வெண்ணாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, இக்கோயில் திருப்பணி செவ்வப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது.
தற்போது, வெண்ணாற்றங் கரையில் அமைந்துள்ள நரசிங்கப் பெருமாள் கோயிலே, அந்த சிங்கப்பெருமாள் கோயிலாகும். இக்கோயிலின் மதிற்சுவரில் சோழர் காலத்தைச் சார்ந்த ஒரு துண்டு கல்வெட்டு, இன்றளவும் காணப்படுகிறது. பிற கல்வெட்டு கள், இதுபோல ஏதேனும் கட்டிடங்களுக்குள் புதைந்து போயிருக்கக் கூடும். இதிலிருந்து சோழர் காலக் கோயில் பிரித்து எடுத்துச் செல்லப்பட்டு, இங்கே புதிதாக அமைக்கப்பட்டதை அறியலாம்.
கண்டெடுக்கப்பட்ட கல்வெட் டில் சங்கு, சக்கர சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில், வெட்டப்பட்ட ஆண்டு, மாதம், தானம் அளித்தவர் பெயர் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தி, “சிங்கப்பெருமாள் கோயிலுக்காக பூர்வதர்மமாக வழங்கப்பட்ட நந்தவனம், பூந்தோட்டம் ஆகிய சொத்துகளுக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால், அவர் கள் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாவார்கள்” என்கிறது. அன்றைய வழக்கில் இப்படியான வாசகம் பயன்படுத்தப்பட்டி ருப்பதை, இதுபோன்ற பல ஆவணங்களில் காண முடிகிறது.
சீனிவாசபுரம் பகுதியில் கோயில் இருந்தபோது, அங்கு இருந்த இக்கல்வெட்டு, பின்னர் கோயில் இடப்பெயர்வு ஏற்பட்டபோது, வடக்கு வீதி வழியே செல்கையில் இங்கே இருத்தி வைக்கப்பட்டு, புதையுண்டு போயிருக்கலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT