Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 29 ஆயிரத்து 536 பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு மற்றும் அரூர் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று (16-ம் தேதி) தொடங்கி வருகிற 23-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இத் தேர்வுகள் 157 மையங்களில் நடைபெறுகிறது. இதில், 9742 மாணவியர் மற்றும் 9498 மாணவர்கள் என மொத்தம் 19240 மாணவ, மாணவியர் எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இத் தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 108 மையங்களில் செய்முறைத் தேர்வு தொடங்கியது. இதில், 10 ஆயிரத்து 296 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. நேற்று தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று செய்முறைத் தேர்வு நடந்தது. இதில், இயந்திரவியல் பிரிவில் 28 மாணவர்கள், உயிர் விலங்கியல் பிரிவில் 47 மாணவர்கள், ஆங்கில உயிர் தாவரவியல் பிரிவில் 48 மாணவர்கள், கணினி அறிவியலில் 49 மாணவர்களும் நேற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.செய்முறைத் தேர்வை தலைமை ஆசிரியர் சேரலாதன் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT