Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM
திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி யது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா, கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி பக்தர்களின்றி நேற்று காலை சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார் குருநாதன் தலைமையில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. கொடிமரத்துக்கு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. தீபாராதனை நடந்தது. கொடிமண்டபத்தில் பத்ம கிரீஸ்வரர், அபிராமியம்மனுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி னார். கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) கணபதி முருகன் உட்பட கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏப்.24-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற வுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT