Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM

தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர் தேவாலயங்களில் - குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி : ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நேற்று குடந்தை மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், பெரம்பலூர், அரிய லூர், கரூர் மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை உணர்ந்து, உலகமக்களின் பாவங் களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். மேலும், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற் றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடை பிடிக்கின்றனர்.

இதை முன்னிட்டு, தஞ்சாவூர் திருஇருதய பேராலயத்தில் நேற்று தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை சி.இருதயராஜ், உதவி பங்குத் தந்தை கே.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கும்பகோணத்தில்...

அதேபோல, கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் பங்கேற்ற குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது. குடந்தை மறை மாவட்ட ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி தலைமை வகித்து, அனைவருக்கும் புனிதம் செய்த குருத்தோலைகளை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் நகரில் உள்ள தேவாலயங்கள் சார்பில் நடை பெற்ற குருத்தோலை பவனி ஸ்டேட் வங்கி அருகே தொடங்கி, சங்குப்பேட்டை, தேரடி, பெரிய கடைவீதி, கனரா வங்கி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு வழியாக சென்று தேவா லயங்களில் முடிவடைந்தது. ஊர் வலத்தில் சென்ற கிறிஸ்தவர்கள் தென்னங்குருத்துகளால் ஆன ஓலைகளை கைகளில் ஏந்திச் சென்றனர். புனித பனியமய மாதா தேவாலயத்தில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் குருத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூரில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிஎஸ்ஐ ஆலயத்தின் தென்னிந்திய திருச்சபை ஆகியவற்றின் சார்பில் அரியலூரில் நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது.

இதேபோல, திருமானூர் அருளானந்தர் ஆலயத்தில் திரண்ட கிறிஸ்தவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக குருத்தோலைகளை கையில் ஏந்தி, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தனர். அங்கு பங்குத் தந்தை சுவிக்கின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் புனித தெரசாள் சர்ச், பசுபதிபாளை யம் புனித கார்மல் அன்னை சர்ச், புலியூர் குழந்தையேசு சர்ச், வேலாயுதம்பாளையம் புனித அந்தோனியார் சர்ச் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் மந்திரிக்கப்பட்ட குருத்தோலை பவனி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x