Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு கல்லூரியில் 15 மாணவி களுக்கு கரோனா தொற்று ஏற் பட்டுள்ளது நேற்று உறுதியானது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சில பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 16 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் 241 மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இவர்களில் 122 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், செங்கிப்பட்டி அருகே உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் பயிலும் 15 மாணவிகளுக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT