Published : 10 Feb 2021 03:16 AM
Last Updated : 10 Feb 2021 03:16 AM

புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் திமலை மாவட் டத்தில் நேற்று 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,807 ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,639 ஆகவும் அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,601-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத் தில் கரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,402-ஆக உயர்ந் துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 19,081 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x