Published : 05 Feb 2021 03:18 AM
Last Updated : 05 Feb 2021 03:18 AM

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அடுத்த மாணிக்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (27). இவர், புதுப்பாடி ரேஷன் கடையில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மதுப்பழக்கத்துக்கு அடிமை யான சரவணனை அதிலிருந்து மீட்க உறவினர்கள் விரும்பினர். இதற்காக, ராணிப்பேட்டை அடுத்த சீயோன் நகரில் செயல்பட்டு வரும்தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சில நாட்களுக்கு முன்பு சரவணனை சேர்த்துள்ளனர்.

இதற்கிடையில், மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சரவணன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாக உறவினர்களிடம் மறுவாழ்வு மைய நிர்வாகிகள் நேற்று முன்தினம் மாலை தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சரவணனின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றபோது சரவணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துது.

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட் டனர். மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் சரவணனை தாக்கி யதால்தான் உயிரிழந்துள்ளார் என புகார் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் அவர்களை சமாதனம் செய்தனர்.

இதுகுறித்து குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x