Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருக்காட்டுப் பள்ளி அருகே விவசாயிகள் நேற்று ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அறிவித்து, வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட் டுப்பள்ளி அருகே முல்லைக்குடி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த வெ.ஜீவக் குமார், பி.முருகேசன் ஆகியோ ரின் தலைமையில், கிராம மக்கள் நேற்று வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், டெல்லியில் 37 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஆங்கில புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக கடைபிடிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தஞ்சாவூரில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், “புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தீவிரப்படுத்து வோம். கார்ப்பரேட் நிறுவன பொருட்களைப் புறக்கணிப்போம். விவசாயத்தைப் பாதுகாப்போம்” என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செய லாளர் சாமி.நடராஜன் நிறைவுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல, பட்டுக்கோட்டை, பூதலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT