Published : 26 Dec 2020 03:16 AM
Last Updated : 26 Dec 2020 03:16 AM

புதிதாக 30பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 750 -ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 416 -ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,395- ஆக உயர்ந்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 19,083-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x