Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

கொமதேகவினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொமதேகவினர்.

பொள்ளாச்சி/திருப்பூர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிக்கு கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அக்கட்சியினர் மாவட்ட செயலாளர் கே.நித்தியானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

51 பேர் கைது

திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் தலைமை யில், அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 51 பேரை வடக்கு போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x