Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

திண்டுக்கல்லில் பாரதியார் பிறந்த தின விழா

திண்டுக்கல் மாவட்ட காமராஜர், சிவாஜி தேசியப் பேரவை சார்பில் பாரதியார் பிறந்ததினவிழா மாவட்ட துணைத் தலைவர் சஞ்சய்குமார் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கிடு முன்னிலை வகித்தார். பாரதியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தனது கவிதைகள் மூலம் தேசப்பற்றை மக்களிடம் வளர்த்த பாரதியாருக்கு மகாதேசிய கவி என்ற தகுதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மாநகர் செய லாளர் மோதிலால் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x