Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு காவல் படையினருக்கு பயிற்சி

பயிற்சி முகாமில் பேசினார் டிஎஸ்பி ரவிச்சந்திரன், அருகில் பயிற்சியாளர்கள்.

மதுரை: சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சார்பில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினருக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல் தடுப்பு, பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் ஆறாவது பட்டாலியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த பட்டாலியன் பிரிவின் துணைத் தளவாய் முருகேசன், உதவி தளவாய்கள் ரவிச்சந்திரன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.மதுரை சட்டக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார், சக்தி விடியல் நிறுவன திட்ட இயக்குநர் ஜேசுதாஸ், மதுரை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சுரேஷ்குமார், சமூகப் பணியாளர் நிர்மலா சொரூபராணி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

சமூகப் பணியாளர் அருள் குமார் நன்றி கூறினார். தமிழ்நாடு சிறப்புப் படையினர் பயிற்சி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x