Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஆளுநரும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பர் என நம்பு வதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசா ரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி குமரி மாவட்டம், ஈத்தா மொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிரு பாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறி ஞர் வாதிடுகையில், ‘பல்கலைக்கழகச் சேவை தொடர் பான வழக்கு. இதனைப் பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது என்றார். இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராகச் சேர்க்கக்கோரி துணைவேந்தர் சூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். பின் னர் நீதிபதிகள் மாணவர்கள் மற்றும் இப்பல்கலை.யின் கீழ் செயல்படும் கல்லூரிகள் நலன் கருதி, இந்த விவ காரத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரும், முதல்வரும் உரிய முடிவெடுப்பர் என நம்புவதாகக் கூறி, விசாரணையை டிச.9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT