Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பா (75). இவருக்கு கண்ணன் (54), பொன்ராம் உட்பட 4 மகன்கள், 3 மகள்கள். இதில் 2 மகன்கள் இறந்துவிட்ட நிலையில் பாப்பா பெயரிலுள்ள சுமார் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தைப் பங்கிடுவது தொடர்பாக பிரச்சினை இருந்தது. சொத்தில் சகோதரிகளுக்கு பங்கு கொடுக்க மகன்கள் மறுத்ததால் அவர்களுக்குள் முன்விரோதம் உருவானது. இந்நிலையில், நிலப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் பாப்பாவுக்கும், அவரது மகன்கள் கண்ணன், பொன்ராம் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகன்கள் தாயாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினர்.
இது குறித்து மூதாட்டியின் மகள் ஜெயமணி கொடுத்த புகாரின்பேரில், மகன்களான வடக்கம்பட்டியில் வசிக்கும் கண்ணன், அவரது மகன் சிவன், கரிசல்பட்டியில் வசிக்கும் பொன்ராம், அவரது மகன்கள் ரகு, கணேசன் ஆகியோர் மீது திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி வழக்குப் பதிவு செய்தார். இவர்களில் கண்ணன் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT