Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

இட்லி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம் :

விருத்தாசலம் அருகே உள்ள ஊ.மங்கலம் கிராமத்தில் கலியம்மாள் என்ற பாட்டி இட்லி அவித்து, விற்பனை செய்து வருகிறார். இவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இட்லி வாங்கி சாப்பிடுவது வழக்கம். நேற்று காலை அவரிடம் 20க்கும் மேற்பட்டவர்கள் இட்லி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அந்த இட்லியில் பல்லி கிடந்துள்ளது.

அப்போது இட்லி சாப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்த பார்வதி (48), அமராவதி (40), கீதாலட்சுமி (18), உமா மகேஸ்வரி (21), அஞ்சலை (50), ஜெயப்பிரியா (21), வசந்தா (50) உட்பட 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x