Published : 09 Dec 2021 03:08 AM
Last Updated : 09 Dec 2021 03:08 AM

கடம்பத்தூரில் மக்கள் : சாலை மறியல் :

திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர், வைஷாலி நகரில்சமீபத்தில் பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் 20 நாட்களாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை.

இந்நிலையில், நேற்று காலை 100-க்கும் மேற்பட்டோர் கடம்பத்தூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், கடம்பத்தூர் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தி, மழைநீர் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x