Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

வாய்க்காலில் மிதந்த பச்சிளங் குழந்தை :

கடலூர் மாவட்டம், புவ னகிரி அருகே உள்ள பூதவ ராயன்பேட்டை பகுதியில் காளி கோயில் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்தக் கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சென்றுள்ளனர். அப்போது கோயிலின் பின்புறம் உள்ள சின்ன வாய்க்காலில் மழை நீருக்கு நடுவே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், மிதந்தது.

செடி, கொடிகளுக்கு நடுவே சிக்கியிருந்த அக்குழந்தையின் அருகில் சென்று பார்த்த போது அது இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதைக் கண்ட பக்தர் கள், உடனே புவனகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித் தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x