Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM

திருவாரூர் மாவட்டத்தில் - மழை பாதிப்பு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஆய்வு : விவசாயிகளுக்கு ஆறுதல்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை பாதிப்பு பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, திருநெய்ப்பேர், திருவாரூர், பெரும்புகழூர், சலிப்பேரி, நன்னிலம், திருப்பாம்புரம், குடவாசல் உள்ளிட்ட இடங்களில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், அவர் கூறியது:

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு அதிகமான வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே, மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள், வீடுகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x