Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு :

பரங்கிப்பேட்டை பண்டார சாலைத்தெருவை சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி மகன் ராஜகோபால்(48). மரம் அறுக்கும் தொழிலாளி. நேற்றுகாலை இவர் அவரது வீட்டுக்கு பின் பகுதியில் உள்ள மரத்தை மின்சார மரம் அறுக்கும் மிஷின் மூலம் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரம் அறுக்கும் மிஷினில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி ராஜகோபால் மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் ஒடிவந்து அவரை மீட்டு, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மனைவி அமுதா அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தேவி மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x