Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM

7-ம் கட்டமாக 817 இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் :

திருநெல்வேில மாவட்டத்தில் 6 கட்டங்களாக கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் 7-ம் கட்டமாக சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுக்க 740 சிறப்பு முகாம்களும், 77 நடமாடும் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மட்டும் 178 மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்கள் எண்ணிக்கை 8.25 லட்சத்தை தாண்டியியுள்ளது. ஆனால், 2-வது தவணை செலுத்தியவர்கள் எண்ணிக்கை 2.75 லட்சமாக உள்ளது. 2-வது தவணை செலுத்த வேண்டியவர்களுக்கும், இதுவரை முதல் தவணை செலுத்தாதவர்களுக்கும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x