Published : 28 Oct 2021 03:08 AM
Last Updated : 28 Oct 2021 03:08 AM

முஷ்ணம் அருகே தந்தையை கொன்ற மகன் கைது :

முஷ்ணம் அருகே தந்தையை கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்

முஷ்ணம் அருகே கூடலையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச் சந்திரன் (45). கூலி தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டுமகள் உள்ளனர். இதில் மூத்த மகளை திருமணம் செய்து கொடுத் துள்ளார். மற்றவர்கள் வீட்டில் உள்ளனர். ரவிச்சந்திரனுக்கு குடிப் பழக்கம் உள்ளது. ரவிச்சந்திரன் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அவரது மூத்த மகன்தினேஷ் (22), ஏன் வீட்டில் குடிக்கி றாய். குடித்து பணத்தை வீணடிக்கிறாய், என கேட்டு திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமுற்ற தினேஷ் கட்டையால் தந்தை தலையில் அடித்துள்ளார். இதில் மயங்கி கீழேவிழுந்த ரவிச்சந்திரனை அவரதுகுடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத் தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்சிதம்பரம் ராஜா முத்தையா மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கெனவே அவர் உயிரி ழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவிச்சந்திரனின் இளைய மகன் ஆனந்தராஜ் (17) முஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் தினேஷை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x