Published : 26 Oct 2021 03:08 AM
Last Updated : 26 Oct 2021 03:08 AM

பத்தமடை பூங்குடையார் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா :

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே பூங்குடையார்குளத்தில் அமைந்துள்ள பூங்குடையார் சாஸ்தா திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை புனித தீர்த்தம் எடுத்து வருதல், யந்த்ர ஸ்தாபனம், மருந்து சார்த்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

நேற்று காலை 6.30 மணி முதல் விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், கும்ப பூஜை, யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. காலை 10 மணிக்கு கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலஸ்தான மகா அபிஷேகமும் நடைபெற்றன.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா எஸ்.கணேசன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x