Published : 19 Oct 2021 03:08 AM
Last Updated : 19 Oct 2021 03:08 AM

கடலூர் மாவட்டத்தில் - பொது இடத்தில் மது அருந்திய 174 பேர் மீது வழக்கு :

கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

இதில் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள கடலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் காவல்உதவி எண்களை அறிமுகம் செய்தார். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை 174 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொது இடங்களில் மது அருந்தினால் கடலுார்- 9498100552, விருத்தாசலம் - 9498100571, சேத்தியாத்தோப்பு 94981 00588, திட்டகுடி -94981 00605, கடலூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு - 04142 284353 ஆகிய எண்களுக்கு தெரியப்படுத்தலாம்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x