Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

புவனகிரி அருகே அறுந்து கிடந்த - மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு :

புவனகிரி அருகே உள்ள பு. உடையூர் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்தார்.

புவனகிரி அருகே உள்ள பு. உடையூர் கிராமத்தை சேர்ந் தவர் தமிழரசன்(28). இவர் நேற்று காலை இவர் வழக்கம் போல வயலுக்கு சென்றுள்ளார்.

அப்பகுதியில் மின்கம்பி அறுந்து வயலில் கிடந்தது தெரியாமல் அதனை மிதித்துள்ளார்.

இதில் மின்சாரம் தாங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பக்கத்து வயல்களில் இருந்த வர்கள் இதனை பார்த்து இது குறித்து புவனகிரி போலீஸாருக்கு தகவல் தந்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணியாக இருக்கும் தமிழரசன் மனைவி பிரியா வுக்கு(24) நேற்று வளையணி விழாவுக்கு ஏற்பாடு செய்த நிலையில் தமிழரசன் உயிரிழந் ததால் அக்கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து பு. உடையூர் கிராம மக்கள் கூறுகையில், "வயல்வெளி பகுதி களில் தாழ்வாக மின்கம்பிகள் செல்கின்றன.

இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நட வடிக்கை இல்லை" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x