Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM

சிறுமி பாலியல் வன்கொடுமை முதுகலை பட்டதாரிக்கு 10 ஆண்டு சிறை :

விருத்தாசலம் அருகிலுள்ள தீவளூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார் (31). முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 2016ம் ஆண்டில் செல்லிடப்பேசியில் தவறுதலாக அழைக்கப்பட்ட எண்ணில் பேசிய சிறுமியிடம் தொடர்ந்து பேசி, பாலியல் ஆசை களை தூண்டும் விதத்தில் பேசி, அச்சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்குச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்த விஷயம் அந்தச் சிறுமியின்உறவினர்களுக்கு தெரிய வர, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த சிறுமி கடந்த 27-5-2016 அன்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டார். இந்த வழக்கு கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

பாதிக்கப்பட்டவரின் வயது 17 ஆக இருந்ததால் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் போக்ஸோ நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதி எம்.எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமியை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திய குற்றத்திற்காக சதீஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்த சதீஷ்குமாரின் தந்தை, பெரியப்பா, சகோதரர்கள் உள்ளிட்ட 6 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு தனது ஏதாவது ஒரு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக தி.கலாசெல்வி ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x