Published : 30 Sep 2021 07:45 AM
Last Updated : 30 Sep 2021 07:45 AM

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்: இருவர் கைது :

குறிஞ்சிபாடி அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (34) 250 நெல் மூட்டைகளை நேற்று விற்பனை செய்வதற்காக பூண்டியாங்குப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்றார். அங்கு இருந்த பட்டியல் எழுத்தர் பாலமுருகையன் (40), லோடுமேன் கலைமணி (37) ஆகியோர் அவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இதையடுத்து ஆனந்தன் புகாரின் பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் மற்றும் போலீஸார் பாலமுருகன், கலைமணியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x