Published : 30 Sep 2021 07:47 AM
Last Updated : 30 Sep 2021 07:47 AM

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம் :

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகதிருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர். முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மு.முத்துசாமி வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டுவரை நடைபெற்ற பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஏற்பட்ட மதிப்பெண் மாறுபாட்டை காரணம்காட்டி, தொடர்ந்து முதுகலை ஆசிரியர்கள் மீதுஎடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 2017-ம் ஆண்டுமுதல் நிரந்தரபணியிடத்தில் பணியமர்த்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஒப்புதல் ஆணை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் டி.பாபு செல்வன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x