Published : 06 Sep 2021 03:17 AM
Last Updated : 06 Sep 2021 03:17 AM

புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 17 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 162 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 10 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 மாவட்டங்களிலும் உயிரி ழப்பு ஏதும் ஏற்படவில்லை.

கரோனா பாதிப்பில் இருந்துபொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x