Published : 30 Aug 2021 03:14 AM
Last Updated : 30 Aug 2021 03:14 AM

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு :

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி அர்ச்சனா(28). இவர், நேற்று முன்தினம் நாவலூர் பகுதியில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கி கொண்டு, ஸ்கூட்டரில் அகத்தீஸ்வர மங்கலம் - சாலூர் செல்லும் வனப்பகுதி சாலையில் சென்று கொண் டிருந்தார். அப்போது, அதே சாலையில் பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென அர்ச்சனாவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, கழுத்திலிருந்த 4 பவுன் செயின் மற்றும் கம்மலை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து, அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x