Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

செப்.1-ல் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து,அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கை குறித்துதெரிவிப்பதுடன் மனுக்களாக வும் அளிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x