Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம் அடுத்த மேல் ஆவதம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (23). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், ஆற்காடு சாமந்திபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்பாஷா (24) என்ற சாராய வியாபாரியும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x