Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM

சாலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு : அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை :

கடலூர் அருகே உள்ள உள்ளேறி பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி நதியா. கடந்த 09 .07.2018 ம் ஆண்டு இவர்கள், தனது ஒரு வயது மகன் நகலுடன் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் கோண்டூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வந்த அரசு பேருந்து கருணாமூர்த்தி பைக் மீது மோதியது. இதில் அவரது குழந்தை நகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். கடலூர் மாவட்ட முதன்மை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதித்துறை நடுவர் பிரபாகர் தீர்ப்பளித்தார். அதில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்தன் (30 ) என்பவருக்கு இரு பிரிவுகளின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x