Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

தடுப்பூசி போட்ட பின் கல்வி நிலையங்களை திறக்க வலியுறுத்தல் :

செங்கல்பட்டு

இந்திய மாணவர் சங்கத்தின் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட பேரவை கூட்டம், செங்கல்பட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.செந்தமிழ், மாநில துணை செயலாளர் நிருபன் சக்ரவர்த்தி சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் க.ஆனந்தராஜ், செயலாளர் மு.தமிழ்பாரதி உட்பட 21 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு கல்வி நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும், மதுராந்தகத்தில் புதியதாக அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x