Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM

வடலூர் அருகே விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு - என்எல்சி லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் :

வடலூர் அருகே உள்ள பார்வதிபுரம், கருங்குழி, நயினார்குப்பம், மருவாய் பகுதி விவசாயிகள் என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்க விரிவாக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை கொண்டு சுமார் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது குறுவை நெற்பயிர் நன்கு விளைந்த நிலையில் சில நாட்களாக சுரங்க நீர் வெளியேற்றப்படவில்லை. இதனால் நெற் பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காட்டுக்கொல்லை கிராமத்தின் அருகே முதல் சுரங்க விரிவாக்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வடலூர் இன்ஸ் பெக்டர் வீரமணி, என்எல்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, கலைந்து போகச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x