Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

ரயில் நிலையத்தில் டிஎம்பி ஏடிஎம் திறப்பு :

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம் திறக்கப்பட்டது.

தூத்துக்குடி

பயணிகள் வசதிக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, மானாமதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஏடிஎம் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. வங்கியின் நூறாவது ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி, மானாமதுரை, திண்டுக்கல் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் புதிய ஏடிஎம் வசதி ஜூலை 12-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவை மூலம் வங்கி வசதிகளை 24 மணி நேரமும் மக்கள் பெறும் வகையில் மொத்தம் 1,397 ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம் மற்றும் இ-லாபி போன்ற வசதிகளை செயல்படுத்தியுள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x