Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

நிலுவையில் உள்ள 3.34 லட்சம் விண்ணப்பங்களுக்கு - திருமண உதவித்தொகை, தங்கம் வழங்க ரூ.3,000 கோடி தேவை : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

சேலம்

திருமண உதவித்தொகை கோரி 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்க சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி தேவைப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முந்தைய விண்ணப்பங்களுக்குத் தான் திருமண உதவித்தொகை வழங்கப்படும் நிலை யுள்ளது. திருமண உதவித் தொகை கோரும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்களை அதிமுக அரசு நிலுவையில் வைத் துள்ளது.நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்க சுமார் ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படும்.

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா 5 லட்சமும், தந்தை அல்லது தாய் இழந்த 3 குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்கள் தொடர்பாக சமூக நலத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில், சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் காலியாக உள்ள 49 ஆயிரம் காலிப்பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x