Published : 06 Jul 2021 03:14 AM
Last Updated : 06 Jul 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 112 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கஞ்சா விற்பனை செய்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டு, 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 9 பேர், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் வைத்து சூதாடியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT