Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM

குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு :

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் நவமணி தெருவைசேர்ந்தவர் அந்தோணி சதீஷ்குமார் என்ற சதீஷ் (41), சிலுவைப்பட்டி கணபதி நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஜோதிராஜா (35). இருவரையும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தாளமுத்துநகர் போலீஸார் கடந்த 18-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x