Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

கரோனா தடுப்பு பணிகள் : 20 கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு :

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் நிலையூர், கைத்தறி நகர், தனக்கன்குளம், நாகமலை புதுக்கோட்டை, நடுமுதலைக்குளம், மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் நேற்று ஒரே நாளில் ஆய்வு மேற்கொண்டார்.

காய்ச்சல் பரிசோதனை, கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, ரேஷன் கடைகளில் பொருட்களின் தரம், நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாடு, நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் இருப்பு விவரம் எனப் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

கரோனா அறிகுறி இருக்கலாம் என சந்தேகிக்கும் யாரையும் வீடுகளில் அனுமதிக்காமல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினரை கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x