Published : 03 Jun 2021 03:15 AM
Last Updated : 03 Jun 2021 03:15 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்துக்கு - 23 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு : ஓரிரு நாளில் சிறப்பு முகாம் தொடங்கப்படும்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டத்துக்கு 23,000 கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 4,000 கோவாக்சின் தடுப்பூசி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஓரிரு நாளில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரி வித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் தொடக்கத் தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் முகாம்கள் வெறிச்சோடின.

அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ள பல வழிகளில் விழிப்புணர் வுகள் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவந்தன. ஆனால், தடுப்பூசி மீதுஇருந்த அவ நம்பிக்கையால் பொது மக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வரவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தாக்கம் தினசரி அதிகரித்து நாள் ஒன்றுக்கு 2,500-ஐ கடந்தது. தொற்று தாக்கம் அதிகரித்து பலர் உயிரிழந்த சம்பவங்களை பார்த்த பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தாமாக முன் வந்தனர்.

இதற்கிடையே, 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டது. அதில், அதிக அளவில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். அதன்பிறகு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.

இதனால், 3 மாவட்டங்களிலும் நடந்த அனைத்து முகாம்களிலும் கடந்த வாரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் நேற்று முன்தினம் முழுமையாக தீர்ந்து போனது. இதனால், ஜூன் 2-ம் தேதி (நேற்று) தடுப்பூசி முகாம்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடக்காது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு நேற்று காலை 7,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,000 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தன. இந்த தடுப்பூசி மருந்துகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து முறையான அறிவிப்பு வெளியான பிறகு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரில் சென்று கோவிஷீல்டு தடுப்பூசியும், கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 6 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,000 கோவாக்சின் தடுப்பூசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அங்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஓரிரு நாளில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,000 கோவாக்சின் தடுப்பூசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நிறுத்தப்பட்டுள்ள தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி முகாம் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா சிறப்பு முகாம்கள் நடத்து வதற்காக 5 ஆயிரம் டோஸ் கோவிஷீல்ட், 1,000 டோஸ் கோவாக் சின் தடுப்பூசிகள் நேற்று வரப்பெற் றுள்ளன. இவற்றை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கையிலான தடுப்பூசி ஒரே நாளில் காலியாகிவிடும் என்றும் கடந்த திங்கட்கிழமை மட்டும் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கும், செவ்வாய்க் கிழமை அன்று 6 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x