Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

சேலம் மாவட்டத்தில் மே 30 வரை - தடுப்பூசி முதல் தவணை 3.61 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது :

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி முதல் தவணை 3.61 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி வரை முதல் தவணையாக, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி களை மொத்தம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 474 பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணை 1 லட்சத்து 19 ஆயிரத்து 630 பேர் செலுத்தியுள்ளனர்.

1,157 பேருக்கு கரோனா

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் நேற்று 1,157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 852 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சையில் 8, 835 பேர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x