Published : 28 May 2021 06:43 AM
Last Updated : 28 May 2021 06:43 AM

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் - 4 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை : ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

ராணிப்பேட்டை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தனியார் மருத்துவமனை களில் கரோனாவுக்கு இலவசமாக மருத்தவ சிகிச்சை அளிக்கப்படும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ சேவைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்கடர் மெமோரியல் மருத்துவமனை, அப்பல்லோ கே.எச். மருத்துவமனை, திருமலை மிஷன் மருத்துவ மனை மற்றும் சிஎம்சி கோவிட் மையம் கன்னிகாபுரம், ராணிப் பேட்டை மாவட்டம் ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான (கரோனா தொற்று உட்பட) சிகிச்சைகளுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x