Published : 25 May 2021 03:13 AM
Last Updated : 25 May 2021 03:13 AM

குமரியில் 1,300 பேருக்கு கரோனா : தூத்துக்குடியில் 860 பேருக்கு தொற்று

திருநெல்வேலி/ நாகர்கோவில்/ தூத்துக்குடி

திருநெல்வேலி மாவட்டத்தில் 488 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,281 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 34,052 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 932 பேர் குணமடைந்திருந்தனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். தற்போது, 5,907 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 456 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 345 பேர் குணமடைந்தனர். இதுவரை 15 ஆயிரத்து 545 பேர் குணமடைந்துள்ளனர்.

3,978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 1300-க்கும் மேற்பட்டோ ருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எணணிக்கை 42,088 பேராக உயர்ந்துள்ளது. 30,459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 16 பேர் மரணமடைந்தனர். தற்போது 6,928 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4,150 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 860 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 7,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x