Published : 25 May 2021 03:14 AM
Last Updated : 25 May 2021 03:14 AM

விவசாய தேவைக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகையின்றி வழங்க ஏற்பாடு : தேவைப்படுவோர் பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் அறிக்கை: விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாயபயன்பாட்டுக்கான இயந்திரங்களின் புழக்கம் போன்றவற்றுக்கு ஊரடங்கு காலத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு மற்றும் டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் இணைந்து மாஸே பெர்குசன், ஐஷர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 60 நாட்களுக்கு வாடகையின்றி இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்வதற்கு வழங்க உள்ளது.

விவசாயிகள் இந்த சேவையை பெற உழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை சேவை மூலமாகவோ அல்லது டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் சேவை மையத்தில் 1800 4200 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது இச்சேவைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் டேனியலை 95006 91658 என்ற செல்போன் எண்ணிலோ, தூத்துக்குடி மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளர் கே.மணிகண்டனை 94575 85752 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x