Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 745 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.1.49 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிக்காத 40 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
372 வாகனங்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சோதனைச் சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்ற 420 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 329 இருசக்கர வாகனங்கள், 5 ஆட்டோக்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தேவையின்றி வெளியில் சுற்றிய 53 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஒரு கார் மற்றும் 35 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT