Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

குடும்பத்தினர் நலன் கருதி பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் : தென்மண்டல ஐ.ஜி. அன்பு அறிவுரை

திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் ஆய்வு செய்த தென்மண்டல ஐ.ஜி., அன்பு. உடன் எஸ்.பி., ரவளிபிரியா

திண்டுக்கல்

பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருந்தால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என தென்மண்டல ஐ.ஜி. அன்பு தெரிவித்தார்.

தென் மண்டல ஐஜியாக புதிதாகப் பொறுப்பேற்ற அன்பு, நேற்று திண்டுக்கல் வருகை தந்து ஆய்வுப்பணிகளை மேற் கொண்டார்.

திண்டுக்கல் புறவழிச் சாலை அருகே இயங்கிவரும் தற் காலிக காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டு கரோனா விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்தார். தொடர்ந்து இன்று முதல் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் செயல்படவுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் குறித்து எஸ்.பி. ரவளிபிரியாவுடன் கலந்தாலோசித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் ஐஜி கூறியதாவது: திண்டுக்கல் புறவழிச்சாலை அருகே இயங்கும் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி கூடுவதால் கரோனா பரவும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க லாரிபேட்டை, பேருந்துநிலையம், ஐ.டி.ஐ. வளாகம், நாகல் நகர் வாரச்சந்தை ஆகிய நான்கு இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகள் இன்று முதல் செயல்படவுள்ளன.

தேவையில்லாமல் வெளியே சுற்றி வரும் நபர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வீட்டிலேயே இருந்தால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடி யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x