Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

வத்தலகுண்டு நகரில் விதிமீறல் : 4 கடைகளுக்கு `சீல்' வைத்த அதிகாரிகள் :

வத்தலகுண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பெரியகுளம் சாலையில் அரசு விதிகளை மீறிச் செயல்பட்டு வந்த வணிக வளாகத்துக்கு பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று `சீல்' வைத்தனர்.

மேலும் மார்க்கெட் வீதியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த இறைச்சிக் கடை, பலசரக்குக் கடை, மற்றும் அரிசி மண்டி ஆகியவற்றுக்கும் `சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். நகரில் கடை வீதி மற்றும் முக்கியச் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியைப் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x