Published : 19 May 2021 03:14 AM
Last Updated : 19 May 2021 03:14 AM
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் நேற்று காவல் துறையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையை ஆய்வு செய்த எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் செய்தியாளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை நேற்று முன்தினம் முதல் முழுவீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். எனவே, இ - பதிவு இருந்தால் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரத்தைத் தவிர, இ-பதிவு இல்லாமல் வருபவர் களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம்.
மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராதமாக இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட் டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக ஏறத்தாழ 250 வழக் குகள் பதியப்பட்டுள்ளன. 200-க் கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். அப்போது, நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.பாரதிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT